துரந்தர் - நிறைவை நோக்கி...
விமலாதித்த மாமல்லன் 'எழுத்துக்கலை' என்ற புத்தகத்தில், கதை சொல்பவர்களின் அசிரத்தையை சுட்டிக்காட்ட எஸ்ராவின் ஒரு கதையை உதாரணமாகக் காட்டுகிறார். அதில் எஸ்ரா ஆவடி, தரமணி, நுங்கம்பாக்கம் என்று குழப்பி இருப்பார். ஒரு கதையில் நிகழ்வுகளில் மேலதிக விவரங்களைத் தருவது, வாசகர்களை கதையில் ஈடுபடுத்தும். அந்த விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். மேம்போக்கான அல்லத தவறான விவரங்கள், படிப்பவர்களின் அனுபவத்தை பாதிக்கும். தாளித்துக் கொட்டுவது சுவை சேர்க்கும் என்பதற்காக, பாயசத்திற்கு கடுகு தாளித்துக் கொட்டுவதற்கு ஒப்பானது. எழுதுபவர் எந்த அனுபவத்தை வாசகர்களுக்குத் தர விரும்புகிறாரோ, தவறான தகவல்களால், அந்த அனுபவம் சிதைகிறது. விவரப்பிழைகள் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருத்தும். சினிமாவை ரசிக்க, காட்சிப்படுத்திக் கொள்ளும் கற்பனை திறன் குறைவாக இருந்தாலும், விவரப் பிழைகள், தீவிர சினிமா ரசிகனுக்கு எரிச்சல் ஊட்டுபவை. தமிழ் சினிமா உட்பட, இந்திய சினிமா, கதை நடக்கும் இடத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு கதை சென்னையில் நடக்கிறது என்றால், சென்ட்ரல்...