K அண்ணாமலை - கட்டுரை
நான் அனைத்தையும் அறிந்தவனல்ல; அனைத்தையும் அறிந்தவர் எவரும் இல்லை! இருப்பினும் நாம் சேர்ந்து, இந்தியாவை கட்டமைப்போம். (Source: I am not perfect. Nobody is! Let’s build India anyway! ) “மக்களின் பின் நிற்பவன் தான் தலைவன்.” ~லவோ ட்சு இது முணுமுணுக்கப் படும் ஒப்புதல் வாக்கு மூலம் அல்ல. கடினமான பொதுவாழ்க்கையில் இருக்கும் எனது முழக்கம். இங்கு, முழுமையின்மை பலவீனமாகக் காணப்படுகிறது; சந்தேகங்கள் நையாண்டிக்கு உள்ளாகின்றன; “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக் கொள்வது அரசியல் தற்கொலைக்கு நிகரானது இருந்தாலும் அதை ஒளிவு மறைவின்றி தெளிவாகக் கூற விரும்புகிறேன்: என்னிடம் எல்லாவற்றையும் மாற்றும் மந்திரக் கோல் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை. சிக்கலான, சுடும் உண்மைகளை தவிர்த்துப் பேசுபவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். "பிரபலமான அரசியல்வாதி”யானவுடன் மக்கள் உங்களை வேறு விதமாகக் காண்கின்றனர். அவர்களது எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் ஆணித்தரமான, உறுதியான, திருப்திகரமான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உங்கள் தயக்கங்களை , உறுதியின்மையை ஆராய்ந்து...