Thursday, December 08, 2022

Ye Bleddy Indians

Photo by John Salvino on Unsplash

During the morning walk, a neighbor narrated his experience visiting a mutual friend in Chennai.  That friend lived in a modern apartment complex.  The visitor (note - the term visitor, which is more universal comprising various visitors like guests, vendors, and business associates) has to seek permission to visit by giving the day and time of the visit.  The resident (the term could have been host) must register that in a system with the visitor's mobile number.  An OTP will be generated before the scheduled visit and sent to the visitor.  The visitor must share the OTP at the gate with the security person.  The security person would also take a picture of the visitor before he can proceed to meet the resident.

Such a painful system with possible errors and failures every step of the way. It cries out "We do not trust you bleddy Indians."

This isn't just about the high-profile apartment complexes but is actually adopted from high-security IT companies.  About a decade ago, I had to meet a few friends in a company in one such IT zone.  I could walk from my home and so I had no money or wallet or any id with me.  Luckily, just before I reached the gate, a friend was driving by, saw me, and took me inside the campus. No questions asked.  Otherwise, I'd have to go through a huge hassle to enter the campus.  There will be additional security at every corner and each company employs a few security guards themselves.  I began working for the company and wrote multiple times to the campus administration to fix the terrible experience visitors and candidates face at the gate.  

Apparently, no "bleddy" Indians find it insulting and demeaning.  If security is a key concern, why can't they ensure it with a better user experience?

The answer lies in our inherited coloniality.   The Brits and then the neo-Brits treated every Indian as someone out to steal from the government.  For every transaction with the government, the bleddy Indian needs to prove that he's so and so and he is the rightful recipient of the product or service.  In the process, a few citizens learned a few tricks to trick the government.  There are fake identity cards, duplicate ration cards, fake caste certificates, fake degrees, etc.  It went beyond fake documentation and there were innovative ways to cheat - like making phone calls from a friend's office, bribing the telephone linesman for unmetered calls (remember Jaspal Bhatti's famous episode on Lineman Damaad), and something as cheap as using a coin tied to a string to make free phone calls from coin-operated booths.

The government treated people with distrust and some people proved that the government was right by their actions.

Technology began to change things.  Cheating for a phone call has almost disappeared with an intermediate step of missed call messaging.  Positive human interaction is beginning to show up in a few places. The ticket examiners in trains do not insist on seeing the passenger's identity card if he is convinced that the passenger is genuine.  

Why can't apartment complexes and IT companies improve the user experience?  A simple note-book based entry and exit is probably sufficient in most cases.  Businesses may need to do ID and purpose validation.  But all these changes are possible only if the enforcer wishes to treat other Indians as equals. 

When will we get there?

Friday, December 02, 2022

தரிசனம்



"வாங்க..." என்றார் குருஜி.

நான் அவரை சந்திக்கும் முதல் முறை.  குருஜியை எனக்கு பதினைந்து வருடங்களாகத் தெரியும்.  ஆனால் நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை.  அவர் குரலைக் கூட அவர் நண்பர் டேப்பில் பதிந்திருந்ததைத் தான் கேட்டிருக்கிறேன்.  நேரில் பார்க்க வேண்டிய தேவையும் இருந்ததில்லை.  இப்போதும் அவரைப்போய் பார்க்கத் தேவை இல்லை தான்.  ஆனால் எனக்கே உரிய காரணம் இல்லாத செய்கையை காரணமாகச் சொல்லலாம்.

குருஜியை பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.  அவர் ஆசிரமம் ஊருக்கு வெளியே, ஒரு பொட்டலில் இருக்கிறது.  சில வருடங்களாக, அவர் அங்கு வந்ததில் இருந்து, கொஞ்சம் பசுமை கண்ணில் படுகிறது.  ஆசிரமம் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட மதத்திற்கு தேவையான எல்லா லட்சணங்களுடன் இருக்கும்.  பரவச பக்தர்கள், கடமையாக பிரச்சாரம் செய்யும் பிரச்சாரகர்கள், கறார் அதிகாரிகள், ஞானிகள் என்று பல வித மனிதர்களையும் அங்கு பார்க்கலாம்.  அதற்கு மேல், முதிர்ச்சி இல்லாத தினசரி அலுவல்கள், முதிர விடா மாற்றங்கள், அதை செய்யும் வித குழப்பங்கள் என்று வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களும் அங்கு இருக்கும்.  மொத்தத்தில் இவை அனைத்தையும் கடந்து, அவரை சந்திப்பது, திருப்பதியில் கடின தடங்கல்களைத் தாண்டி வேங்கடாச்சலபதியை தரிசிப்பது போலாகும்.  உடலும், மனதும் அலுத்து இருக்கும் பொது, ஆன்மா பரவசப்படும் நேரம். 

விழுந்து வணங்கினோம்.  எங்கிருந்து வருகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்.  பதில் சொன்னோம்.  ஒரு குழந்தை கதை கேட்பதைப் போல கேட்டுக்கொண்டார்.  ஒரு நாளைக்கு என்னைப்போல் சுமார் நூறு பேரையாவது இது போல் சந்தித்திருப்பார்.  குழந்தை போல் கேட்டு, குழந்தை போல் மறந்தும் விடுவார் என்று தெரியும்.  அவர் கேட்க வேண்டும் என்று தான் நூற்றுக்கணக்கில் மக்கள் அவரை சந்திக்க வருகிறார்கள்.

"என்ன வேண்டும்..." என்றார்.  அவருக்கு அநேகமாக இது ஒரு பழகிப்போன கேள்வியாக இருக்கவேண்டும்.   பார்க்க வருபவர்கள் ஒரு கோரிக்கையோடு தானே வருகிறார்கள்.

"உங்களைப்  பார்க்க வேண்டும் என்று தான் வந்தோம்." என்றேன்.  அவர் ஆச்சர்யப்படவில்லை.   எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இன்னும் முடியாததால் அங்கே சற்றே அசந்தர்ப்பமான மௌனம் நிலவியது.  எனக்கு அங்கிருந்து உடனே இடத்தை காலி செய்ய மனம் இல்லை.  கொடுத்த காசிற்கு முடிந்த வரை பயணிக்கும் அற்ப பயணி போல் அங்கிருந்தேன்.  அமைதியை கலைக்க விரும்பி, "பதினைந்து வருடம் முன்னாள் உங்களைத் தேடி அலைந்தும் இருக்கிறேன்..." என்றேன்.

---
அருண்தான் எனக்கு குருஜியை அறிமுகப் படுத்தி இருந்தான்.  அருணின் ஆன்மீக தேடல், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.   அவனுக்கு குருவின் ஆளுமை ஒரு முக்கிய அம்சம்.  அவன் வழிகாட்டி, நன்கு கற்றறிந்த ஒரு மனிதர்.  அழகானவர்.  அவர் மூலமாக குருஜியின் மீது நம்பிக்கை வைத்திருந்தான்.  நம்பிக்கைகள் மீது பெரிதும் நம்பிக்கை இல்லாத எனக்கு, குருஜி ஒரு வழிகாட்டி மட்டும் அல்ல, கடவுள் கூட.  ஒரு கோடையில் நான், என் மனைவியுடன் அருணோடு மதிய உணவுக்குப் பின்,  குருஜியைத் தேடிப்பார்ப்போம் என்று கிளம்பினோம்.  அக்காலத்தில் அவர் குறிப்பிட்ட சில நண்பர்களையும் சில சிஷ்யர்களையும் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் இருந்தார்.  

அவர் நீலாங்கரையில் இருப்பதாக அருணுக்குத் தெரிந்திருந்திருந்தது.  ஆனால் நீலாங்கரை கிராமம் அல்ல என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.  படபடக்கும் வெயிலில் ஒரு மணி நேரம் தெருத்தெருவாக சுற்றினோம்.  விசாரிக்கக்கூட மனிதர்களைக் காணோம்.  ஏதோ ஒரு  பங்களா வாசலில் நின்றிருந்த கூர்க்காவிடம், “ஐயா இருக்காங்களா?” என்று அருண் கேட்டான்.  “யார் ஐயா, இங்க யாரும் இல்லை” என்றான். அவன் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடும்.  பல பங்களாக்கள், கருப்புப் பணத்தின் மறு உருவங்கள்.  டிவி சீரியல்கள் அதிகம் இல்லா அக்காலத்தில் பங்களாக்கள் வெறும் காலி வீடுகளாக இருந்திருக்க சாத்தியம் அதிகம்.

வெயிலின் கடுமை தாங்க முடியாமல், ஒரு சிறிய மரத்தின்கீழ் மூவரும் ஒண்டிக் கொண்டோம்.  வீட்டிற்குப் போகலாம் என்றேன்.  இவ்வாறு குருஜியை இவ்வாறு  தேடுவது அபத்தமாக இருந்தது.  அருணின் பிடிவாதத்தைத் தணிப்பது சிரமம்.  “நாம் தீவிரமாகக் காண விழையும்போது கிடைப்பவர் இறைவன்...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து ஒருவன் சென்று கொண்டிருந்தான்.  எங்களை நோக்கி நின்றிருந்த அருண் அவர் முகத்தைப் பார்த்திருக்கலாம். அழுக்கு ஆடைகள், காலில் செருப்பின்றி அந்த வெயிலில் தார்ச்சாலையில் நடந்தவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.  எங்களைக் கடந்து அவன் சென்றபின், “ஏன் இவராகக் கூட இருக்கலாம்” என்றேன்.  அந்த மனிதன் சற்றே நின்று கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தை நானும் என் மனைவியும் மட்டும் பார்த்தோம்.

Thursday, November 10, 2022

Reservation & Competition

"Reservation helps upper caste people" is a counter-intuitive statement.  But this could be true.  Here is an explanation.

First an anecdote:

The last two organizations I worked in had an identical problem regarding lateral hires for senior roles - like Architects, Program Managers, etc.  The roles demanded domain/technology-specific skills, communication/writing skills, interpersonal skills, a good understanding of customers' business, etc.  Too many people came and none survived for more than a few months.   After years of frustrating search, it dawned upon me that those who survived the grind in the organization had something in common - they all had competed in some all-India level exams - like JEE, CAT, or equivalent.  They didn't necessarily go to an IIT or IIM.  It is the effort put in to compete in an all-India level exam in open-category that made the difference.  And those who failed did not face such exams earlier in their lives but managed to gain 10-15 years of experience in the industry, thanks to the big IT companies.

Now for some data:

I took the list of Indians who were CEOs in multinationals of the western world from Top 30 CEOs Of Indian Origin Who Are CEOs Of Best Multinational Companies - Inventiva.   The list is not exhaustive. Many well-known entrepreneurs have graduated from IITs and NITs or RECs. But this list has only 30, of which 22 were born and had their college education in India; 10 were from IIT, 3 from BITS Pilani, 2 from Manipal Institute, 3 from St. Stephens College Delhi, and 1 from Shri Ram College Delhi.   

IITians go through tough competition is a well-known fact. IITs began their JEE after 1961.  I do not have any data on IITians who graduated in the 1950s and went on to lead multinational companies.  

Also, those who went to Manipal or BITS went there just because they didn't qualify for IITs or NITs.  The competition for admission to St. Stephens and Shri Ram college are well known. The common thread is, they all competed at an all-India level for their undergraduate or postgraduate studies.

So, competing with more applicants helps in some way later in life, even if the candidate failed in getting admission to prestigious institutions.

What happens to a competition when there is a reservation?

For those in OC:  More candidates try to squeeze through a smaller entrance.  The competition gets tougher.  The preparation is more rigorous.

For those in Reserved Categories:  The entrance is relatively wider.  The competition exists but is within a group of communities.  The communities for which reservation is available are not known for prioritizing higher education like the so-called Forward communities; So, fewer people from reserved communities attempt the tests, the threshold is lowered and so the overall effort in preparation is relatively less for a candidate from reserved communities.

Considering two candidates of equal caliber and achievement in their school curriculum, the one from OC needs to put in more effort as compared to a candidate from a community that benefits from the reservation.  The result of the entrance test is immaterial when it comes to reaching greater heights in life.

The OC candidate having trained better for a tougher competition continues to stay ahead of the other.  The immediate success the other candidate gets definitely helps in his social status, but fails to take him to the heights the other one can reach.

I would like to know of people who benefited from reservation earlier in their life and rose to lead a multi-national organization later to prove me wrong.

Sunday, October 30, 2022

உஸா

"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான்.   ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார்.  அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது.  மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள்.  உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான்.  அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள்.  பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான்.  திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி.



-------------------

“அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது.  மொழி எது என்று புரியவில்லை.  தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது.  சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.  கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது.  அல்லது ரத்தமா?  அவள் புலம்புவதுடன் பார்த்தால் ரத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.  நம் ஊர் பெண் போலத் தெரியவில்லை.  ஹஜ்ஜில் பார்த்த வட ஆப்பிரிக்கப் பெண் அல்லது யெமன் பெண்ணைப் போல உடுத்தியிருந்தாள். 

அபுபக்கர் திடுக்கிட்டு விழித்தார்.  

“இது என்ன கனவு! என் இறந்த பிள்ளைகளில் ஒன்றா? ஆனால் இந்தப் பெண் சிறுமியல்லவே...”

“இரவில் என்ன சாப்பிட்டேன்...”

போன மாதம் ஹஜ் போய்விட்டு வந்தபின், சாப்பாட்டின் நாட்டம் குறைந்துவிட்டதை உணர்ந்தார்.  எடையும் குறைந்திருக்கக் கூடும்.

எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்தார்.  தூக்கம் வரவில்லை. மணி பார்க்கவும் முனையவில்லை.  சற்று நேரத்தில், ஆஸான் கேட்டது.  எழுந்திருக்கத் தோன்றவில்லை. அப்படியே படுத்திருந்தார்.

 “என்ன ஆச்சு.. இன்னும் படுத்திருக்கீங்க..நீங்க வரலையா?” சலீம் கேட்டான்.  நான்கு குழந்தைகள் இறந்தபின் பிறந்தவன் சலீம்.  

“இல்லப்பா... உடம்பு முடியல. அப்புறம் வரேன்” என்றார்.

அடுத்த நாள் சலீம் அவன் மனைவி கருவுற்றிருப்பதாகச் சொன்னான்.

“ரொம்ப சந்தோஷமப்பா... இனிமேல்  தண்ணி நான் பிடிச்சுட்டு வரேன்.  அம்மா சமைக்கட்டும்.  நல்லா பாத்துக்க.”

அழும் பெண் கனவு அடிக்கடி வர ஆரம்பித்தது.  மசூதியில் யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது.  

----

“என்ன பாய்? உடம்பு சரியில்லையா? கண்ணுக்குக் கீழ கருவட்டம் கட்டியிருக்கு.  ஆளும் இளச்ச மாதிரி இருக்க. வீட்டுல விசேஷம் வருது, முகத்துல தெரியலையே... ஏதாவது பிரச்சினையா? “ என்றார் ராமசாமி படையாச்சி.  

ராமசாமி படையாச்சி பள்ளித் தோழன்.  அபுபக்கர் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டு  வாப்பா கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார்; படையாச்சி எட்டு வரை போனார்.  அதற்குப் பின் குடும்ப வழக்கப்படி கோவில் பூசாரி வேலை.  மதுரகாளி அவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்று அவரைப் பார்த்தால் தெரியும்.  கோவில் நடை திறக்கும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி தவிர பிற நாட்களில் வயலில் இறங்கி வேலை செய்யும் உழைப்பாளி. அவ்வப்போது மதுரகாளி அவர்மீது இறங்கி அருள் வாக்கு தருவதும் உண்டு.  ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை.

“வாரவாரம் குறி சொல்ல ஆத்தா என்ன சன் டீவில வர சினிமாவா. அவ உதவணும்னு நெனச்சா நாமதான் போய் கேட்கணும்.” என்பார்.

“ஒண்ணுமில்ல... ஒரு கனவு.  கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு.”

படையாச்சிக்குக் கனவுகள்மீது மதிப்பு உண்டு.  வாயுக் கோளாறு இல்லாத நேரத்தில் வரும் கனவு தெய்வங்கள் நம்முடன் பேசும் மொழி என்று அவருக்குத் தெரியும்.  

கனவைப் பற்றி படையாச்சியிடம் சொன்னார்.  “வெள்ளிக்கிழம எட்டு மணிக்கு மேல வீட்டுக்கு வாங்க... ஆத்தாட்ட கேட்டுடுவோம்.” என்றார்.  

அபுபக்கரின் நம்பிக்கை சராசரி இந்தியனைப் போன்றது.  பத்து தலைமுறை இஸ்லாம் இன்னும் இந்த மண்ணில் தோன்றிய தெய்வங்கள் மீதுள்ள நம்பிக்கையை சாய்க்கவில்லை.  கோவிலுக்குச் செல்லாவிட்டாலும், மதுரகாளி போன்ற தெய்வங்கள் அவர் மனத்திலிருந்து துரத்தப் படவில்லை.  அடுத்த தலைமுறை இப்படி இருக்குமா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு.  சலீம் அரசியல் கட்சிக்காக திருச்சி சென்று விட்டு வந்து, கோவில்களைப் பார்த்து முறைப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

----

வெள்ளிக்கிழமை அசைவம் வேண்டாம் என்று சொன்னது அவர் மனைவிக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது.  மாலை ஆறு மணியிலிருந்து பரபரப்பாக இருந்தார்.  எட்டு மணிக்கு படையாச்சி வீட்டிற்குப் போனபோது அப்போதுதான் அவர் வந்து குளிக்கப்போயிருந்தார்.  “உட்காருங்க... அப்பா வந்துருவாங்க.” என்றான் குமார்.  அவனும் கோவில் பணிக்குப் போக ஆரம்பித்து இரண்டு வருடங்களாகிறது.

வீபூதி பூசி படையாச்சி வரும்போதே அவர் சன்னத நிலைக்குச் செல்ல தயாராக இருந்தார்.  கண்மூடி தியானித்துவிட்டு, கண்களைத் திறக்காமலேயே, “ரோட்டுக்குக் கிழக்க கோவில் நிலம் இருக்கு.  அங்க என்னப்பாத்து அக்கா-தங்கை மூணு பேரையும் பிரதிஷ்டை பண்ணு. செல்லாயிக்கு இடம் கொடுத்த நான் உசாவுக்குக் கொடுக்க மாட்டேனா!” என்றார்.

உத்தரவின் படி நடக்க அபுபக்கர் தயாராக இருந்தாலும், நேரடியாக அதில் இறங்குவது சரியாக இருக்காது என்று தோன்றியது.  படையாச்சியே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வார் என்றும் பணம் மட்டும் அபுபக்கர் கொடுப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள்.  பணம் கொடுத்தது அவர் தான் என்று இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

----

சலீமின் மனைவி பெண் குழந்தையை பெற்றாள்.  சல்மா என்று பெயரிட்டார்கள்.  உசா என்று பெயரிட்டிருக்கலாமோ என்று அபுபக்கருக்குத்  தோன்றியது.

கோவில் எழும்பத் தொடங்கியது.  அழும் பெண் கனவு வருவது தொடர்ந்தது; ஆனால் அவள் இப்போது புலம்பவதில்லை என்று அபுபக்கருக்குத் தெரிந்தது. 

முக்கன்னியர் கோவில் என்று பெயரிடப்பட்டு, கோவிலுக்குக் கும்பாபிஷேகமும் நடை பெற்றது.  மதுர காளி கோவிலில் வைத்துப் பூசை செய்த கலசங்களும், புனித நீரும் வண்டியில் ஊர்வலமாக முக்கன்னியர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குட முழுக்கு செய்விக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் சார்பாக அபுபக்கரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.      கும்பாபிஷேக நீர் தெளிக்கப்படும் போது, அபுபக்கர் கலங்கினார்.  இது தான் ஜம்ஜம் என்று நினைத்தார்.  விழா முடியும் போது, நன்றி நவிலலில் படையாச்சி, அபுபக்கரின் கொடையை நினைவு கூர்ந்தார்.  அருட்பெருக்கில், அபுபக்கர் கண்ணீர் சுரந்தபடி இருந்தார்.  

நெற்றி நிறைய நீருடன், மரியாதை செய்விக்க அணிவிக்கப்பட்ட மாலையுடன் வீட்டுக்கு வந்தபோது, சலீம் குதித்தான்.

“அப்பா, இது ஷிர்க் என்று உங்களுக்குத் தெரியாதா? நாம் அல்லாவின் கோபத்திற்கு ஆட்படப் போகிறோம்.”

இதுவரை ஒரு முறை கூட கடிந்து பேசியிராத அபுபக்கரின் கோபம் தலைக்கேறியது.  “நீ அல்லாவுக்கா பயப்படறவன்?  அரசியல் கட்சிக்காரனுக்காக மசூதிக்குப் போற நீ எனக்கு சொல்ல வேண்டாம்.  நான் செய்வது சரின்னு எனக்குத் தெரியும்; சிறுவாச்சூர் அம்மனுக்குத் தெரியும். அது போதும் எனக்கு.”

சலீம் ஆத்திரத்துடன் வெளியே சென்று பைக்கை உதைத்துக் கிளம்பினான்.  மெதுவாக நடந்து தொட்டிலில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி உச்சி முகர்ந்து, “அவன் கிடக்கான்.  எங்களுக்கு நீ கெடச்சிருக்க தாயி...உஸா!” என்றார்.

Wednesday, October 26, 2022

The Glass Ceiling of Muslims in a Democracy


On Rishi Sunak becoming the PM, the liberals and Congressmen in India began talking about the inability of a minority - read Muslim - to become a PM or a President forgetting their own history of opposing Muslim and Christian President candidates.   I see Sunak becoming the PM as an extraordinary event as no one else came forward to run a country that is a mess.  Even in Britain, it is almost impossible for a Muslim to be the head of state.  

Let me generalize the statement.  "It is almost impossible for a Muslim to be a head of state in democracy in a multi-cultural country."  Why?

In all democracies, whether Parliament or Presidential, the representative has to be elected twice before leading the nation.    In a Presidential system like the US, party delegates vote for the Presidential candidate before the candidate seeks votes from the general public.  In a Parliamentary system the order changes - he gets elected from his constituency and then gets elected by the party as a leader.

Take the case of a Muslim candidate in a Presidential system.  For him to be an acceptable leader, the delegates must vote for him to be the Presidential candidate.  As long as he maintains a Muslim identity, it is impossible to win the candidature from the party colleagues.  So, he has to shed his identity and has to be seen as one among the people of that country - pretty difficult for a Muslim as his allegiance to his god supersedes his allegiance to his country.  Even if he manages to win the candidature of his party colleagues, it is an uphill task to convince people in a multicultural society.  

In the case of a Parliamentary system, he can probably win his constituency fairly easily if the majority of voters are Muslims.  In that case, it is likely that his opponent may also be a Muslim.  To impress Muslim voters, he has to play his Muslim card and not be a leader for all.  He has to be a leader for Muslims first.  Only then he can win his constituency of a few hundred thousand people.  If he manages to win, it is highly likely that his colleague legislators would be suspicious of him because of the strong Muslim identity that he used to win.  That would prevent him to be the leader of his party in the Parliament.

There is one case in which a Muslim can lead the government.  If the party that won the majority has a super PM like Sonia Gandhi, a Muslim can hope to lead the government.  The super PM decides on the leader of the party and everyone falls in line.  This is unlikely to happen in matured democracies and matured democratic parties.



That is how India had Presidents like Fakruddin Ali Ahmed, Zakir Hussain, etc.  Kalam was different as he rarely projected his Muslim identity.  In fact, most Muslims do not see him as their man.  His detachment from the Muslim community was the primary reason that made NDA consider him as their Presidential candidate.

Yes, there is a limit to which a Muslim politician can rise but that is constrained only by his identity and his people - not by the multicultural society he is part of.

If you are a Muslim in a multicultural society and have high political ambitions, try returning to the religion of your ancestors.  It is not just politically rewarding but can also be good for you and the world.



Tuesday, October 11, 2022

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

எச்சரிக்கை:  கல்கியின் பொன்னியின் செல்வன் போல இதுவும் ஒரு கற்பனைக் கதையே.  வரலாற்று ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.

 “இன்றிரவு மன்னர் உங்களை சந்திக்க அழைத்துள்ளதாக சேவகர்கள் தெரிவித்தனர்” என்றான் கிருஷ்ணன் ராமன்.  

“எதற்கு?” கேட்டான் அருண்மொழி.

“அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னான் கிருஷ்ணன்.

“என் கண்ணைப் பார்த்துச் சொல்.  உனக்குத் தெரியும்தானே?”

“மதுரை வெற்றிக்குப் பின் நடந்தவற்றை மன்னர் விரும்பவில்லை என்று அறிகிறேன்.  அது பற்றிப் பேச அழைத்திருக்கலாம் என்பது என் யூகம்.”

அருண்மொழி தலைகுனிந்தான்.  “எனக்கும் நடந்தவை சரியில்லை என்று தான் தோன்றுகிறது.  அண்ணனிடம் எப்படிச் சொல்வது?  அவர் கோபக்காரர்.  மதிப்பில் என் தந்தைக்கு நிகரானவர். இளவரசர் கூட.  அடுத்த அரசருக்கு இடித்துரைக்கும் அளவிற்கு செல்வாக்கு எனக்கு இல்லை.” 

“மன்னர் இளவரசரிடம் பேசியிருக்கலாம்.” 

“இருக்கலாம். இரவில் மன்னரை சந்திக்கப் போகிறேன்.  நீயும் வருகிறாயா?”

“எனக்கு அழைப்பில்லை.  உத்தரவிட்ட செயலை செய்து முடிக்க மட்டும்தான் என் விசுவாசம் உள்ளது.  துணைக்கு வர அல்ல.”

-----

“உட்கார்.” என்றார் மன்னர் சுந்தரச் சோழன்.

“பரவாயில்லை.  இந்த சந்திப்பிற்கு இளவரசர் வரவில்லையா?”

”அவனுடன் நேற்று பேசி விட்டேன்.  அதற்குப் பின் பிரும்மராயருடன் பேசியபின் தான் உன்னை அழைத்தேன்.”

சற்று நேரம் மௌனம் நிலவியது.  மன்னர் தான் பேசத் தொடங்கினார்.

“ஏன் அழைத்தேன் என்று கேட்பாய் என்று நினைத்தேன்.”

அருண்மொழி தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

“நீ ஏன் தலை குனிகிறாய்.  இப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனை இளவரசனாக்கியதற்கு நான் அல்லவா தலை குனிய வேண்டும்?”

அருண்மொழியிடமிருந்து பதில் இல்லை.

“தர்ம சாஸ்திரங்கள் ஒரு அரசனை உருவாக்க பல விஷயங்களைக் கூறுகின்றன.  அரசனாகப் போகிறவன் ஆறு தீய குணங்களை வென்றிருக்க வேண்டும் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.  சொல்! உன் தமையன் அந்த ஆறில் எவற்றை வென்றிருக்கிறான்?  அவனைக் கேட்டால் மதுரையை வென்றதை பெருமையாகப் பேசுவான்!”

“இளவரசர் கோபக்காரர்தான். ஆனால்...”

“அது மட்டுமா?” வறட்சியாக சிரித்தார் மன்னர்.  “தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன் எப்படி பரந்து விரிந்த சோழத்தைக் கட்டுப் படுத்தப் போகிறான்?”

”நீ விவேகி என்று எனக்குத் தோன்றுவதால் சொல்கிறேன்.  குறுநில மன்னன் போல சண்டையிட்டு, எல்லையை விரிவாக்கும் காலம் போய்க்கொண்டிருக்கிறது.   உத்தமனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.  பிரும்மதேசத்தை சோழத்தின் கீழ் கொண்டுவர அவர் கொடுத்த உபாயம் தான் வந்தியத்தேவனுக்கு உன் தமக்கையை மணமுடித்துக் கொடுத்தது. கொடுக்கல்-வாங்கல், திருமண உறவு போன்றவற்றால் நம் எல்லையை விரிவாக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது.  இப்போதும் கொடூரக் கொலைகாரன் போல நடந்து கொள்ளும் அரசனை மக்கள் எப்படி மதிப்பார்கள்?”

”நீங்களும் சித்தப்பா உத்தமரும் பிரும்மராயரும் சொன்னால் அண்ணன் கேட்பார்.  அவர் உங்கள் எண்ணங்களை உணர ஒரு வாய்ப்பு தாருங்கள்.”

“இந்த நிதானம் தான் வருங்கால அரசர்களுக்குத் தேவை.  நீ சொல்வதால் ஒரு முறை அழைத்துப் பேசுகிறேன்.  எனக்கு நம்பிக்கையில்லை.  நேற்று அவனைக் கடிந்து கொண்டதால் இன்னும் என் மீது கோபத்தில் இருப்பான் என்று நினைக்கிறேன்.  இரண்டு நாட்கள் போகட்டும்.  பெரியவர்கள் பேசிக் கொள்கிறோம்.  நீ  அங்கு வரவேண்டாம்.  நாளை உத்தமனை சந்தித்து என் கவலையை நீ தெரிவித்து விடு.”

----

“இளவரசர் அவசரமாக கடம்பூர் செல்ல வேண்டியிருந்ததால், இங்கு வர முடியவில்லை என்று தெரிவிக்கச் சொன்னார்” என்றான் சேவகன்.

“நீ போகலாம்.”

சுந்தரச் சோழனின் முகம் இறுகியது.  “இன்னொரு அறிவுரை கேட்க, அதுவும் பிறர் முன்னிலையில் கேட்க அவன் தன் மானம் இடம் கொடுக்கவில்லை போலும்.” 

அவரே பேசட்டும் எனக்காத்திருந்தனர் பிரம்ம ராயரும் உத்தமச் சோழனும்.

“ஆதித்தனின் இந்த வெறிச்செயலால், நாம் மதுரையை வென்ற செய்தி கூட கசப்பாக இருக்கிறது.  நான் ஆதித்தனை அரசனுக்குரிய தகுதிகளுடன் வளர்க்கவில்லை என்று பெரியவர்கள் கூறும் போது நான் பேச்சற்று நிற்கிறேன்.”

“அவன் இங்கு வராமல் இருந்ததும் நல்லதற்குத்தான். நாம் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.”

மௌனத்தைக் கலைத்தார் பிரம்மராயர்.  “ஆதித்தனை இளவரசாக்க அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறதா மன்னரே?”

“கடந்த காலத்தை விடுங்கள்.  வீரம் மட்டும் ஒருவனை நல்ல அரசனாக்காது.  பாண்டியனைக் கொன்ற பின் அவன் உடலுக்கு ஒரு வீரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்திருந்தால், பாண்டிய நாட்டவர் நம் மீது ஓரளவிற்காவது பணிந்து இருப்பர்.  அவர்களில் இருந்தே ஒருவனை அரசனாக்கி நம் ஆட்சியின் கீழ் அவனை ஆள விடுவது எளிதாக இருந்திருக்கும்.  அதை விட்டுவிட்டு, பாண்டியனின் தலையை வெட்டி...சொல்லவே கூசுகிறது.  யாரும் இதை நல்ல குடியில் பிறந்தவனின் செயலாகக் காணமாட்டார்கள்.”

“ ஒரு வேளை ஆதித்தனுக்கு முடி சூட்டும் எண்ணம் எனக்கு என்றாவது இருந்திருந்தால் அது இன்றோடு முற்றுப் பெருகிறது.  உத்தமா!  நீயே அடுத்த சோழ மன்னனாக வேண்டும் என்பதே என் விருப்பம்.”

“என் தந்தைக்கு நிகரான மன்னரே! நான் மன்னனாக விரும்பியிருக்கிறேன்.  ஆனால் அதற்கு நான் தகுதியானவனா என்று பல முறை சிந்தித்திருக்கிறேன்.  போர்களில் சோழம் பெற்ற வெற்றிகளை களத்தில் இறங்கி வாள் வீசியவர்களின் வெற்றியாகவே நான் கருதுகிறேன்.  ஆதித்தன் உட்பட எனக்குக் கிடைத்த வீரர்கள் பெற்றதே அவ்வெற்றிகள். எனக்குப் போர்களில் ஈடுபாடு இல்லை.  தேவைக்கு அதிகமாகவே நான் போரிடுகிறோம் என்றே பல முறை நினைத்துள்ளேன்.  உங்கள் அன்பிற்கும் கட்டளைக்கும் பணிந்தே  அதிக ஈடுபாடின்றி சோழத்திற்காகப் போரிடச் சென்றேன்.    உங்கள் விருப்பம் நான் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் நான் பணிவேன்.  ஆனால், போரில் விருப்பம் இல்லாதவன் மன்னன் ஆவது சரியா?”

“உத்தமா, உன் அறிவு முதிர்ச்சிதான் ஒரு மன்னனுக்குத் தேவை.  போரிட வீரர்கள் உண்டு, தலைமை தாங்க தளபதிகள் உண்டு.  போர் தேவையா, தவிர்க்கக் கூடியதா என்று சிந்திக்க, நிதானம் உள்ள அரசனால் மட்டுமே முடியும்.  அது உன்னால் முடியும் என்று எனக்குத் தெரியும்.  குந்தவையும் வந்தியத் தேவனும் கூட ஒப்புக் கொள்வர்.  அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருப்பதைக் கூட உன் சாதனையாக நினைக்கிறேன்.”  இதைச் சொல்லும்போது தான் அவரால் புன்னகைக்க முடிந்தது.

“ஆதித்தன் இதை விரும்ப மாட்டான்.  அவனைப் பொறுத்தவரை நான் கோழை அல்லது வேகமற்றவன்.  நான் அரசனானால் எப்போது யார் என்னைக் கொல்வார்கள் என்று பயந்தபடியே ஆளவேண்டும்.”

“அதை பிரம்ம ராயர் பார்த்துக் கொள்வார்.  எங்கும் சென்று விடாதே. இங்கு பணிகள் உள்ளன.   எனக்கு நீ ஆதரவாக இருந்தது போல, உனக்கு ஆதரவாக அருண்மொழி இருப்பான்.  இப்போது நீ போகலாம்.  பிரம்ம ராயரே, நீங்கள் இருங்கள்.”

-----

”ஆதித்தன் கடகமல்ல மன்னரே, அவர் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார்.”

“என் மீது வைத்துள்ள மதிப்பு முக்கியமல்ல, என்னை ஆதித்தன் கொல்ல முயல்வான் என்று நான் பயப்படுபவனல்ல.  ஆதித்தன் அரசனாவது சோழ சாம்ராஜ்யத்தின் முடிவிற்கு ஆரம்பமாகும்.  அதை நான் விரும்பவில்லை.  அர்த்த சாஸ்திரங்கள் கூறியபடி, அவனை இங்கிருந்து வெளியேற்றி எல்லைகளுக்கு அனுப்பி வைத்தேன்.  அவன் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டான் என்பதன் அடையாளம் அவன் வீரபாண்டியனின் உடலுக்கு இழைத்த அவமானம்.  வீர பாண்டியனின் தலையை வெட்டியபோது என்னை நினைத்திருப்பான் என்று தோன்றுகிறது.  மேலும் வெட்டிய தலையை சோழ நாட்டின் தலைநகருக்குக் கொண்டு வரவேண்டிய தேவை என்ன?”

”அர்த்தசாஸ்திரங்கள், இப்படிப்பட்ட இளவரசனை சிறையில் அடைக்கவும்  ஆலோசனை கூறுகின்றன.  சிங்கத்தை சிறையில் அடைத்துப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை.  பாரத்வாஜரின் அர்த்தசாஸ்திரத்தில் கூறியது போலச் செய்து விடுங்கள்...”

“தஞ்சாவூர் முத்தரையர்களையோ மதுரை மறவர்களையோ இதில் சம்பத்தப் படுத்தாமல் செய்து முடியுங்கள்.  அதனால் விளையும் கிளர்ச்சிகள் தவிர்க்கப் படவேண்டியவை.  சோழத்தின் மீது பற்றுள்ள பார்ப்பனரைப் பயன்படுத்துங்கள்.  தேசத்தின் மீதுள்ள பற்றிற்கும் இளவரசர் மீதுள்ள விசுவாசத்திற்கும் அவர்களால் தர்க்கரீதியாக வேறுபாட்டைக் காணமுடியும்.”

“உத்தரவு மன்னரே.”  


Sunday, August 21, 2022

Freedom Now, Bigotry later

 "Why don't you wear a Bindi?" asked the older person to the girl in her teens. "I like it this way. We, as Hindus have such freedom and no one issues a death threat to us." replied the girl, who knew her Hindutva. I pitched in.

"Good that you know your freedom. Do you know there are various stages of freedom?"

The girl hesitated, the elder who asked the question first helped her. "We have the freedom to choose our Gods. One day you feel like worshipping Meenakshi and the next day you feel like worshipping Krishna. Or, you may choose to not worship at all. In Abrahamic religions, people don't have that freedom."

"Does it mean there are no atheists in Islam or Christianity?" asked the girl.

"Yes, for example, the punishment for apostates is death in Islam," said the elder.

I added:

"By exercising this little freedom now, you may be giving up the larger freedom of the next generations. Do you realize?"

"When you don't follow small rituals, you can't get your children to follow them. In two generations, they may be left with no tradition to call their own. In the absence of comforting rituals and symbols, ideologies enter to fill the gap. In their moments of weakness, Abrahamic religions enter and take away the higher levels of freedom.  As a Hindu, you are exercising the lower levels of freedom, and only as a Hindu, you can get to the higher levels of freedom.    The important life goal for a Hindu is to aspire for the highest levels of freedom.   Look around the people in other religions now.   Do you think they have freedom - higher or lower?  What do they have to claim culture and aesthetics as their own?  Do you want that to happen to your children or grandchildren?"

I hope the girl gets the message. I believe this is one of the reasons for the spread of Christianity in Hindu and Pagan communities. A few hundred years ago, most Jathis used to wear the sacred thread. Now, see which Jathi resists Christianity the most.

As people migrate, they don't get to follow their traditions in their new environments. They can't wear their religious symbols; they can't celebrate their festivals. Their culture remains only in their memory, that too for just a generation.

Look at the rise of wokeness in migrated communities that are no more in touch with their traditions. Wokeness is just as bigoted as the Abrahamic religions.

As Hindus, if we don't take our symbols and rituals seriously now, there won't be anything to call Hindu culture; worse - it would be communism, liberalism, or Abrahamic faiths that would be running riot (sometimes literally) in our societies.



திராவிடமும் வடிவேலுவின் கிணறும்

 சில வருடங்களாக மொழிபெயர்ப்பில் இறங்கியுள்ளதால் நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

“’Money laundering’ என்பதற்கு தமிழில் பெரும்பாலும் பண மோசடி என்றே மொழிபெயர்க்கின்றனர்.  இதை மோசடி என்று சொல்ல முடியாது; சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூர்வ பணமாகக் காட்டுவது தான் ’Money laundering’.   இதற்கு இணையான செயல்கள் தான் திராவிடக் கட்சிக்காரக்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நம்ப வைப்பது; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைப்பது போன்றவை.  இவை எல்லாவற்றிற்கும் பொறுத்தமாக தமிழில் என்ன சொல்/உவமை இருக்கிறது? இவற்றிற்கு சரியான தமிழ்ப்பதம் இருக்கிறதா?” 

சில நிமிடம் யோசித்துவிட்டு  - ”வடிவேலு, கவுண்டமணி, செந்தில், விவேக் டயலாக் கிடைத்தால் கூட பரவாயில்லை.  உதாரணத்திற்கு, "ஸ்டிக்கர் ஒட்டுவது" - நன்றாக உள்ளது; ஆனால் பொய்யை உண்மையாக்கும் செயலை அது சுட்டவில்ல” என்றார்.

இயல்பிலிருந்து தமிழ் நாடு எவ்வளவு விலகியுள்ளது என்பதற்கு இது அத்தாட்சி.  அன்றாட வாழ்வில் காணும் விஷயங்களை உவமைகளாக, பழமொழிகளாகக் கூறுவது வழக்கம்.  பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன, கிவாஜ பதினான்கு புத்தகங்களில் பழமொழிகளைத் தொகுத்துள்ளார்.  ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் புதிதாக சேர்த்த உவமைகள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.  ஐம்பது ஆண்டுகள் ஒன்றும் சொற்பமில்லை.  ஆங்கிலத்தைல் கார்ப்பரேட் வழக்கில் நூற்றுக்கணக்கான உவமைகள் வந்துள்ளன.  இவற்றில் சில தமிழிலும் உண்டு; ஆனால் பேச்சு வழக்கில் பல உவமைகள் மறைந்துவிட்டன.

இப்போது தமிழ் வழக்கில் உள்ள கொஞ்சநஞ்ச உவமைகளுக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை வசனங்கள் தான் ஆதாரம்.  இரண்டு தமிழர்கள் *தமிழில்* பேசிக்கொண்டால் வடிவேலு/விவேக்/கவுண்டமணியின் வசனங்கள் இடம் பெறாத உரையாடல்கள் இருக்க முடியாது.  சமூக ஊடகங்களில் மீம்கள் இவற்றை இன்னும் ஆழமாகப் பதிய வைக்கின்றன.

நண்பரின் கேள்விக்குப் பதிலாக வடிவேலு என்சைக்ளோப்பீடியாவைத் தேடியதில் கிடைத்த ஒன்று:


இது பொருந்தாது என்று நண்பர் நிராகரித்து விட்டார். இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியாது.  முடிந்தவரை இந்தக் காட்சியை திராவிடப் புரட்டல்களுடன் ஒப்பிட முனைந்துள்ளேன்.

வடிவேலு கொஞ்சம் அப்பிடி-இப்பிடி ஆசாமி, ஈவேரா போல.  அவருக்கு ஒரு கிணறு வெட்ட வேண்டும்; ஈவேராவுக்கு செல்வாக்கை மீட்க வேண்டியது போல. வெள்ளைக்காரனுக்கு கொஞ்சம் அனுசரித்துப் போய், கால்ட்வெல்லின் பழைய திராவிட சர்டிபிகேட்டை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.  அப்படி வெட்டியது தான் திராவிடம் என்னும் வடிவேலுவின் கிணறு.

கிணறு வெட்டியதாக சர்ட்டிபிகேட் யுனெஸ்கோ மன்றத்தில் வாங்கியது யுனெஸ்கோ விருது என்னும் வடிவேலுவின் கிணறு.

சர்க்காரியா கமிஷன் முழுதும்  வடிவேலுவின் கிணறுகள் நிறைந்துள்ளன. பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா,  உண்ணாவிரதம் இருந்து இலங்கைப் பிரச்சினையை தீர்த்தது, புதிய சட்டசபை திறப்பு விழா என பல வடிவேலுவின் கிணறுகளே.




Thursday, March 24, 2022

கஷ்மீர் ஃபைல்ஸ் - சில சிந்தனைகள்

 கஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சில நாட்களாகின்றன.  மனம் இன்னும் அமைதியடையவில்லை.  அதற்குக் காரணம் - படத்தில் கண்ட வன்முறை மட்டுமல்ல;  படத்தில் காட்டிய வன்முறையை விட பல மடங்கு கொடுமைகளை பண்டிட்டுகள் சந்தித்துள்ளனர் என்பதை நாம் வெறும் தகவல்களாக அறிவோம்.  இத்தனை வருடங்கள் நாம் பண்டிட்டுகளின் பாதிப்பை உணராமல் இருக்கின்றோமே என்பது பெரும் சோகம்.  இந்த ‘நாம்’ என்னையும் சேர்த்துத்தான்.


உணர்வுத் தீவுகள்


வாயில் மைக்கைத் திணித்து கருத்து வாங்கும் தொலைக்காட்சி கலாச்சாரம் வந்தபின்னும், நதிமார்க் படுகொலையை மக்கள் முன் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேட எந்தத் தொலைக்காட்சியும் பத்திரிகையாளரும் முன்வரவில்லை.  அவர்கள் பிழைப்புக்காக அடுத்த செய்திகளுக்குத் தாவி விடுவர் என்பது இயல்பு.  1990களில் பிட்டா கராத்தேயுடனான அந்த நேர்காணலைப் பார்த்த நினைவிருக்கிறது.  அதில் அவன் முதலில் கொன்றது சதீஷ் என்ற பண்டிட் இளைஞனை என்பது நினைவில் இருக்கிறது.  கிட்டத்தட்ட அந்தக் காட்சி ‘ரோஜா’ திரைப்படத்தில் வந்தது.  அந்தப் பண்டிட்டின் குடும்பத்தின் கதி என்ன என்று எந்தப் பத்திரிகையாளரும் கண்டுபிடிக்க முனையவில்லை. அது இயல்பு தான் என்றாலும், அன்று எனக்கு ஏன் அந்தக் கேள்வி எழவில்லை?


முப்பது வருடங்களுக்குப் பின் வந்த ஒரு திரைப்படத்திற்குப் பின் தான் எனக்கும், என்னைப் போன்ற சராசரி ஹிந்துத்துவர்களுக்கும் அந்தக் கேள்வி எழுகிறது.  மற்றவர்களுக்கு?


அந்தக் காலங்களில், கஷ்மீர் பயங்கரவாதிகள் கூட்டிய கூட்டங்களையும் அதில் எழுப்பப்பட்ட முழக்கங்களையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  பனி மூடிய நகரில், கறுப்பு, சாம்பல் உடைகளில் துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை மனத்திரையில் காணமுடிந்தது. அதை நேரடியாகக் கண்ட காட்சி ஊடகத்தினர், ஹாலிவுட் படக்காட்சிகளை நேரில் பார்த்த திருப்தியுடன் பதிவு செய்திருக்கக் கூடும்.  துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அவர்களுக்கு ஹீரோக்களாகத் தெரிந்திருக்கக் கூடும்.  ஹீரோக்கள் காட்டிய ‘கெத்’துகளும் கஷ்மீரியத் என்ற பிரிவினைவாத கொள்கைகளும் அவர்களை ஈர்த்திருக்கலாம்.  பார்த்தவர்களில் பண்டிட்டுகளும் இருந்தனர்.  


பிறர் துன்பத்தை உணர முடியாத தீவுகளாக நாம் இருந்திருக்கிறோம்.  ஊடகங்கள் தேவைப்படும் போது மக்களை உணர்வு பூர்வமாகத் திரட்டியதைப் பார்க்கிறோம்.  ஆனால், காஷ்மீர் பண்டிட்டுகளைப் பொறுத்தவரை ஊடகங்கள் அதைச் செய்ய முயலவில்லை.  அந்த விதத்தில் இந்தத் திரைப்படம் இந்தியர்களை - முக்கியமாக ஹிந்துக்களை உணர்வு பூர்வமாக இணைக்க முயன்றிருக்கிறது.


பிராமணர்கள் அனுதாபம் தேடுவதில்லை 


ஒரு விதத்தில் பெரும்பாலான பண்டிட்டுகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுவதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.  இந்தத் திரைப்படத்திலும், புஷ்கர்நாத் தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லி அனுதாபம் தேட முனையவில்லை.  


ஒன்று - கடும் வன்முறையும் இழப்பும் மனிதனை மரத்துப் போகச் செய்திருக்கும்.  படத்தில் வசனமாகவும் இந்தக் காரணம் சொல்லப்படுகிறது.  


இரண்டு - வாழ்க்கையே கேள்விக்குறியாகும் போது, நினைவுகள் சுமைகளாக இருந்திருக்கும்; வாழும் ஆசை உள்ளவர்கள் சோக நினைவுகளை ஆழ்மனதில் அடக்கம் செய்துவிட்டு நிகழ்காலத்தில் வாழ முயன்றிருக்கலாம்.   முயன்று தோல்வியுற்று தற்கொலை செய்துகொண்டவரைப் பற்றி ஒத்திசைவு தளத்தில் படிக்கவும்.  


மூன்று - ஆன்மீகத்தை எதேச்சையாக அறிந்திருந்தாலும் ஹிந்து, முக்கியமாக பிராமணர்களான பண்டிட்டுகள், அனுதாபம் தேடுபவர்கள் இல்லையோ? அவர்கள் வணங்கும் சாரதா  தேவியும் சிவனும் கொடுத்த சக்தியில்,  பலர் கடும் உழைப்பினால் பல்வேறு நாடுகளில் முன்னுக்கு வந்துள்ளனர்.  மத்திய மாநில அரசுகளும், சட்டங்களும்  பிராமணர்களுக்கு எதிரான போக்குகளைக் கொண்டிருந்தாலும், இந்த நாட்டின் மீதுள்ள பற்றினால் அவற்றைப் பொருட்படுத்தாமல், உழைப்பை அதிகரித்த பிராமணர்களையும் நாம் அறிவோம்.


பண்டிட் அமைப்புகள் (எடுத்துக்காட்டாக: பாணூன் கஷ்மீர் அமைப்பு, அதன் மார்க்கதர்ஷன் தீர்மானம் வழி) இந்த அவலத்தை வெளியே எடுத்துச் செல்ல முயன்றன - ஆனால் வெற்றி பரவில்லை. இதற்குப் பல காரணங்கள். :-(

  - நண்பரின் தகவல்


இப்போது பண்டிட்டுகள், நடந்த வன்முறையை பிறர் அறிய வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே உள்ளனர்.  நடந்த அநீதி, இஸ்லாம் ஆதரிக்கும் வன்முறை ஆகியவற்றை உலகம் அறிய வேண்டும் என்ற முனைப்பையே நான் பார்க்கிறேன்.  சிலருக்கு மீண்டும் கஷ்மீரில் வசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கக் கூடும்.  நடைமுறையில் அது சாத்தியமா என்பது பெரும் கேள்வி.  


கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?


இந்தப் படத்திற்குப் பின் எழும் முக்கியமான கேள்விகள் - தொடர்ந்து பெங்கால் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ் படங்களுக்கு நாம் இடமளிக்கப் போகிறோமா அல்லது அரசியல், சமுக, அறிவுப்புலங்களில் மாற்றத்திற்காக உழைக்கப்போகிறோமா என்பதே.


இந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு தந்த தரப்புகளில் ஏதும் ஆச்சர்யம் இல்லை.  எதிர்த்தரப்பும் ஆச்சர்யத்திற்கு உரியதல்ல.   முகத்திரை கிழிக்கப்பட்டதில் அவர்களிடம் அதிர்ச்சியும் பயமும் காணப்படுகிறது. 


ஒரு மிகப்பெரும் கூட்டம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.   காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் தான் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில், சமூகத்தை பெரிதும் பாதிக்கவல்ல திரைப்பட ஊடகத்தினரின் அமைதி முகத்தில் அறைகிறது.  இந்தியா முழுதும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடிகர்களும் திரைப்படத்துறையில் பிறரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். விவேக் அக்னிஹோத்ரி உண்மையை உரத்துச் சொல்ல முடிந்ததால் அவர் மேலுள்ள பொறாமையா?  நடிகர் நடிகையர் மக்களின் பாராட்டுகளைப் பெறுவதால் அவர்கள் மேல் பொறாமையா?  பொறாமைதான் காரணம் என்றால் அது புரிந்துகொள்ளக்கூடியதே.  ஆனால் அது காரணமல்ல என்பதும் நாம் அறிந்ததே.  அவர்கள் அமைதிக்குக் காரணம் - மாபெரும் கோழைத்தனம். 


இந்தக் கோழைகள்தான் அவர்களுடைய திரைப்படங்கள் மூலம் சமூகத்தை ஆட்டிவைக்கிறார்கள் என்பது நம் பெரும் துர்பாக்கியம்.  அவர்கள் மட்டும் வீரர்களாக இருந்தால், இந்தப் படம் போல உண்மையை உரக்கச் சொல்ல தைரியம் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால், இந்தக் கோமாளிகளின் செல்வாக்கு குறைக்கப்பட வேண்டும்.  முடிவாக, இப்படத்திலிருந்து எழும் கேள்விகளை, திரையுலகக் கோமாளிகள் முன் வைக்கிறேன்.  


“தொடர்ந்து பெங்கால் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ் படங்களுக்கு நாம் இடமளிக்கப் போகிறோமா அல்லது அரசியல், சமுக, அறிவுப்புலங்களில் மாற்றத்திற்காக உழைக்கப்போகிறோமா?”


Earlier Posts