Posts

Showing posts from August, 2017

Machine Learning

(Translation of my Tamil blog at http://justexperience.blogspot.in/2017/08/blog-post_15.html ) "Meet me tomorrow after three.  My classes get over by then.  Let's talk about your project." He hesitated. "Why? Aren't you available?" Suddenly his face cleared.  "No Sir, I'll come." I know.  It's a Friday, a day when new movies release.  He must have quickly altered the plan for me. I have a soft corner for Tamilvaanan.  He comes from a family of farmers.  He has told me about the hard physical work their family goes through for a good part of every year.  He believes education can make a difference to his family.  He isn't sharp but is capable of hard work. He's my only hope in a set of 20 ME students.  Most students join masters because either they didn't get a job or found a suitable alliance for marriage.  Tamil was clear about learning. He came on Friday. "Do you know anything about  As...

மெஷின் லேர்னிங்

"நாளைக்கு மூணு மணிக்குமேல் வந்துவிடு.  எனக்கும் கிளாஸ் முடிஞ்சிருக்கும்.  உன்னோட பிராஜக்ட் பத்தி பேசலாம்.” தயங்கி நின்றான்.  “வேற ஏதாவது வேல இருக்கா?” என்றேன். திடீரென்று முகத்தில் தெளிவுடன், “இல்ல சார். வந்திடறேன்.”   எனக்குத் தெரியும்.  வெள்ளிக்கிழமை புதுப்படம் ஏதாவது வெளியாகி இருக்கும்.  எனக்காக அதை ஒத்திப் போட்டிருப்பான். தமிழ்வாணன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததனால் இருக்கலாம்.  ஒவ்வொரு நாளும், பனிரெண்டு மணி நேரங்களுக்கு மேல் கடின உடல் உழைப்பில் அவன் குடும்பமே ஈடுபட்டதாக அவன் சொன்னதும் காரணமாக இருக்கலாம்.  கல்வியால் முன்னேறிவிடலாம் என்ற அவன் நம்பிக்கையால் இருக்கலாம்.  அதிக புத்திகூர்மை இல்லாவிட்டாலும், கடின உழைப்புக்கு அஞ்சாதவன். என் எம் ஈ மாணவர்களில் ஒரே நம்பிக்கை அவன் தான்.  இங்கு முது நிலை கல்வியின் நிலமை அது.  வேறு வேலை கிடைக்காதது, கல்யாணம் தள்ளிப்போவது போன்ற காரணங்களுக்காக  எம் ஈ சேருபவர்கள்தான் அதிகம்.  தமிழ் மட்டும்தான் இன்னும் தெரிந்து கொள...

ஸ்வச்ச பாரத்

"யூ  மே கோ  இன் சார்", என்றாள் உதவிப் பெண். "வா, வா, எத்தனை நாள் ஆச்சு பார்த்து.  எப்படி இருக்கே?  இன்னும் உத்தராகண்ட்ல தான் இருக்கேன்னு நினைச்சேன்." என்றாள் கமலா. கமலா அனந்தராமன்.  பிரின்ஸிபல். "அங்கதான் இருக்கேன்.  ஒரு வேலையா இந்தப்பக்கம் வந்தேன்.  உன்னையும் பார்த்துவிட்டுப் போலாம்னு வந்தேன்.  அப்படியே நாம மூணு வருஷம் முன்ன ஆரம்பிச்ச ஸ்வச்ச பாரத் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்." மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி அது.  பிரதம மந்திரியின் தூய்மை பாரதம் பற்றி கமலாவுடன் பேசிக்கொண்டிருந்த போது, சிறு வயதில் சுற்றுப்புற தூய்மையை குழந்தைகள் தெரிந்து கொண்டால், 5, 10 வருடங்களில் பெரும் மாற்றம் கொண்டு வரலாம் என்று பேசினோம்.  அத்துடன், ஜப்பானில், பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும் சொன்னேன்.  குழந்தைகளே, பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பழகிக்கொள்கின்றனர் என்றேன். "இங்க குழந்தைகள சுத்தம் செய்ய சொன்னா, அப்புறம், தினமலர்ல போட்டு காச்சிருவான்.  டிஈஓ, ஸிஏஓன்னு நான் த...