Posts

Showing posts from October, 2022

உஸா

Image
"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான்.   ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார்.  அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது.  மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள்.  உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான்.  அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள்.  பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான்.  திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி. ------------------- “அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது.  மொழி எது என்று புரியவில்லை.  தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது.  சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.  கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது.  அல்லது ரத்தமா?  அவள் ...

The Glass Ceiling of Muslims in a Democracy

Image
On Rishi Sunak becoming the PM, the liberals and Congressmen in India began talking about the inability of a minority - read Muslim - to become a PM or a President forgetting their own history of opposing Muslim and Christian President candidates.   I see Sunak becoming the PM as an extraordinary event as no one else came forward to run a country that is a mess.  Even in Britain, it is almost impossible for a Muslim to be the head of state.   Let me generalize the statement.  "It is almost impossible for a Muslim to be a head of state in democracy in a multi-cultural country."  Why? In all democracies, whether Parliament or Presidential, the representative has to be elected twice before leading the nation.    In a Presidential system like the US, party delegates vote for the Presidential candidate before the candidate seeks votes from the general public.  In a Parliamentary system the order changes - he gets elected from his constituency...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

எச்சரிக்கை:  கல்கியின் பொன்னியின் செல்வன் போல இதுவும் ஒரு கற்பனைக் கதையே.  வரலாற்று ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.  “இன்றிரவு மன்னர் உங்களை சந்திக்க அழைத்துள்ளதாக சேவகர்கள் தெரிவித்தனர்” என்றான் கிருஷ்ணன் ராமன்.   “எதற்கு?” கேட்டான் அருண்மொழி. “அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னான் கிருஷ்ணன். “என் கண்ணைப் பார்த்துச் சொல்.  உனக்குத் தெரியும்தானே?” “மதுரை வெற்றிக்குப் பின் நடந்தவற்றை மன்னர் விரும்பவில்லை என்று அறிகிறேன்.  அது பற்றிப் பேச அழைத்திருக்கலாம் என்பது என் யூகம்.” அருண்மொழி தலைகுனிந்தான்.  “எனக்கும் நடந்தவை சரியில்லை என்று தான் தோன்றுகிறது.  அண்ணனிடம் எப்படிச் சொல்வது?  அவர் கோபக்காரர்.  மதிப்பில் என் தந்தைக்கு நிகரானவர். இளவரசர் கூட.  அடுத்த அரசருக்கு இடித்துரைக்கும் அளவிற்கு செல்வாக்கு எனக்கு இல்லை.”  “மன்னர் இளவரசரிடம் பேசியிருக்கலாம்.”  “இருக்கலாம். இரவில் மன்னரை சந்திக்கப் போகிறேன்.  நீயும் வருகிறாயா?” “எனக்கு அழைப்பில்லை.  உத்தரவிட்ட செயலை செய்து முடிக்க...