Friday, June 28, 2024

Governing a Community

Residents Welfare Associations (RWA) have become the de facto local governments in our cities. At the lowest level, the responsibility is for the upkeep of the common area.  As the properties get bigger, more responsibilities like Security, Lifts, Water Management, Genset get added.  That is, on a smaller scale RWA begins sharing the local government's responsibilities of safety, water and power supply.  Bigger RWAs have to deal with waste water treatment (Sewage), maintenance of streets, gardens and other facilities like a mini PWD.

It's the need of the hour.  In fact, leaving it to the RWA may ensure better service than what the government has to offer.  But how well equipped are the RWAs to deal with its level of governance? 

Reluctance to Take Responsibilities

Whether the residents are young or old, more so if they are young, do not want to take any responsibility towards common causes.  RWA responsibilities do consume one's time, is an unpaid and a thankless job. Some section of the residents do not take any responsibility but are ready to find fault with the functioning of the association.  The rest are like an average citizen in a democracy - does not care what happens and does not contribute to the functioning of the system.  Again like a democracy, this could be the majority.

Incompetent and Power Hungry

A minuscule section of the middle/upper-middle class wants to enjoy the designation and the power that comes with it.  By being a Secretary or any office bearer, they and their family members can boss over and send the hapless security person on errands.  It is a reality, that the people manning the security or doing the cleaning job respect the powerful.  One doesn't get respect if he doesn't throw his weight around.  Sad reality of modern societies.

Complexities RWAs face

  • Apartment complexes with swimming pools, tennis courts, gyms and other play areas add to the woes of the RWA.  There are safety hazards that they need to be aware of and comply with regulations. 
  • Dispute resolution between residents.  RWA office bearers are expected to be police (to see who violates the rules) and judge (penalize them without violating fundamental rights).
  • Associations have their usual finance related responsibilities.  But they also need to comply with the GST regime.  So, RWAs need to know the basics of accounting and tax.
  • There are obscure government agencies that issue license to lifts.  To get the license, the RWA must have AMC, got safety certificates and insurance for the lifts.  Larger apartment complexes may need certifications from the fire departments as well depending upon the facilities they have.
  • Annual audits and finance statements are to be submitted to the government.
  • In addition to these basic operations, there could be vendors who want to reach out to the residents as their potential customers - like banks, car dealers etc. They need to be entertained for they can contribute towards the financial welfare of the association.
In a nutshell, an RWA is expected to be managed like a business.  Depending upon the size of the property, it could be an SME or a real Enterprise.

Difference between an RWA, government and businesses

The executive of the government does not care much for the people's feedback.  It is the legislature that has to go to the people and get their mandate.  In an RWA, the office bearers are both the executives and the legislature.  A business needs to keep the customers and the employees satisfied.  If a customer can not be satisfied he can move on and the business can get new customers.  In an RWA, the members are stuck to the association and a separation is possible only when the members choose to sell their property.  For non-payment of water or property or electricity charges, respective departments can take penal actions.  RWAs do not have any rights for such actions.

Members do not understand democracy and cannot see reason due to various reasons.  (The office bearers also run the risk of these).  Unlike a business or a government agency, responsible office bearers of an RWA have to ensure smooth interaction with the members. Members would hijack meetings with their personal agenda, talk things are important to them but not to the entire community.   Like a vocal minority, they can derail any development with their non-cooperation.  The office bearers will have to listen to them and also ensure that the meeting proceeds to meet the objectives. 

The lack of understanding of democracy and systems is probably the bane of the world's largest democracy at the national level in the parliament and at the micro level in RWAs.







Friday, June 21, 2024

புண்ய க்ஷேத்ரே காசி க்ஷேத்ரே

By Marcin Białek - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=14647396


வாராணசி எனப்படும் காசி ஆன்மீக பூமி.   தெய்வங்களின் சைதன்யம் காசியில் நிரம்பியுள்ளது.  அதனால் தான், காசி மக்களை ஈர்க்கிறது.  சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் மிகச்சில நகரங்களில் காசியும் ஒன்று.  ஒரு பெரும் ஆலமரம் போல, உயிருள்ள ஜீவனாக உள்ளது காசி.  அதை பகுத்துப்பார்க்கும் மனத்தால் புரிந்து கொள்வது சுலபமல்ல.  பல்வேறு தகவல்களை எப்படியோ சேமித்து வைத்திருக்கும் unconscious மனதுக்கு இணையானது வாராணசி.  இது ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு முழுமையான பதிலேதும் காசியில் கிடைப்பதில்லை. பல்லாயிரம் கேள்விகளைக்  கேட்டுக் கேட்டு அலுத்து கேள்வியும் அடங்கிப் போவது தான் காசியின் சிறப்பு.

காசியில் இருக்கும் வரை கடந்த காலத்தின் சுமைகள் இருப்பதில்லை.  வருங்காலத்தின் பயமும் இருப்பதில்லை. அங்கு வரும் யாத்ரீகர்கள் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு காசி அளிக்கும் அனுபவத்தைப் பெறுகின்றனர்.  காசியில் செய்ய வேண்டிய கடமைகளும், தரிசிக்க வேண்டிய கோவில்களும் மட்டுமே யாத்ரீகர்களின் மனதில் நிற்கின்றன.

ஒரு குடும்பம் பல தலைமுறைகளாக வசித்து வரும் வீட்டில் எவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கும்.  அதைப் போல, காசியிலும் களைய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.  மகா மயான பூமி.  முழுதாக எரிக்கப்படாமல் சிதையிலிருந்து தள்ளப்படும் பிணங்களைப் போல, அங்கு முழுதாக எரிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள்  இன்னும் எஞ்சியிருக்கின்றன.  எவ்வளவு எரித்தாலும் ஏதோ ஒன்று மிஞ்சும் போல.

காசி மக்களும் பெரும்பாலும் நிகழ்காலத்தில்தான் வாழ்கின்றனர்.  தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள இயலாத, நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் கருதும் மக்கள் காசிவாசிகள்.  காசி அரசர்கள் தானமாகக் கொடுத்த நிலங்கள் மடங்களாகவும், மடங்கள் அதைச்சார்ந்த மக்களுக்கு வீடுகளாகவும் மாறின.  வீடுகள் கடைகளாகவும் மாறிவிட்டன. கோவில்களைச் சுற்றியுள்ள இடங்கள் கோவில்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு அவை யாவும் வியாபாரத் தலங்களாகிவிட்டன. காசி நகரின் அமைப்பைக் காணும்போது, அது கிட்டத்தட்ட  Fractal நகரமாகத் தோன்றுகிறது. 

ஆன்மீகம் புனித உணர்வை ஏற்படுத்தும்.  புனித உணர்வு வழிபாட்டிற்கும், வழிபாடு மதத்திற்கும் வழி வகுக்கும். மதம் மக்களை இணைத்து, ஈர்க்கும். மக்கள் கூடும் இடம் வியாபாரத்திற்கு ஏற்ற இடம்.  அடிப்படை ஆன்மீகத்தை மறைக்கும் அளவிற்கு வணிகம் காசியை ஆக்கிரமித்துள்ளது.  வணிகமே பிரதானம் என்ற மன நிலையில், சுத்தம் சுகாதாரம் ஆகியன பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காசியின் அசுத்தமே, அதன் நாடாளுமன்ற பிரதிநிதியும், இந்த நாட்டின் பிரதமரான மோதியை சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஸ்வச்ச பாரத் திட்டத்தைக் கையிலெடுக்க வைத்தது என்று சொல்லிவிட்டு, ஓடும் கார் கதவைத் திறந்து புளிச்சென்று வாயில் உள்ள புகையிலையைத் துப்பினார் கார் ஓட்டுனர்.  இது தான் காசி மக்களின் நிலைமை.  தன் செயலை உணராமல், அரசியல் பேசி, மற்றவரைக் குறை கூறும் நிலைமை.  இந்த மானுட இயல்பும் காசியில் அடர்ந்து காணப்படுகிறது.

ஓயாமல் ஒலி எழுப்பிக்கொண்டு வழி கேட்கும் வாகனங்கள்; வழி விடு என பிறரை அதட்டும் பண்டிதர்கள்.  ஆதி சங்கரருக்குக் கிடைத்த ஞானம் இப்போதைய காசி யாத்ரீகர்களுக்கும் கிடைக்க ஆயிரம் வாய்ப்புகள்.  இருப்பினும் மனிஷா பஞ்சகத்தை பாடிய ஆதி சங்கரருக்கு அடுத்த ஞானிக்காக காசி காத்திருக்கிறது.

உலகின் சுருக்கமான வடிவம் இந்தியா என்றால், இந்தியாவின் சுருக்கமான வடிவம் காசி.  ஆன்மீகம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் பல மொழிகளும், பல மதங்களும் கூடும் இடமாக காசி உள்ளது.  மெய் ஞானம் தேடி இந்தியாவுக்கு வரும் மேற்கத்தியர்கள் போல, காசிக்குச் செல்லும் இந்தியர்களும் உணர்வார்கள்.  ஆன்மீக உச்சம் ஒரு புறம்; அருவருப்பின் உச்சம் ஒரு புறம் என்ற இரு எல்லைக்களுக்கிடையே ஊஞ்சலாடுவர்.

உலகாயத் தேவைகளுக்காக காசி வருபவர்கள் இன்னொரு ஆச்சரியம்.  சந்து பொந்துகளில் புகுந்து பல்வேறு கோவில்களில் உள்ள இறைவனை தரிசிக்க அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தில் என்ன கேட்பார்கள்?  தென்னிந்தியாவில், திட்டமிட்டு கட்டப்பட்ட பெரும் கோவில்கள் படிப்படியாக பக்தனின் மனதை அமைதிப்படுத்தி, இறைவனின் சன்னதிக்கு இட்டுச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் காசியில் அது சாத்தியமே இல்லை. காசியும் காசி மக்களும் உள்ள நிலைமையில் அங்கு வரும் யாத்ரீகர்கள் அகோரியாகவோ அல்லது நாத்திகனாகவோ மாறும் சாத்தியமும் உள்ளது.

காசி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது கடினம்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்ப்புடன் உள்ள நகரத்தைச் சரி செய்வது அசாத்தியம். அதற்கான எத்தனங்களைப் பார்க்கும் போது, அவை குழந்தைத்தனமாகத் தோன்றுகிறது.  காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி மேற்கொண்ட கட்டுமானங்கள், வழக்கமான அரசாங்க குளறுபடி போல எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதோ?

எது எப்படி இருப்பினும், காசியை விட்டுக் கிளம்பும்போது, அடுத்த முறை வரும்போது என்று எங்களைப் பேச வைத்தது.  இந்த ஜன்மம் முடியும் போது, அடுத்தது முக்தியோ அல்லது மற்றொரு ஜன்மமோ, எதுவாக இருந்தாலும், போகும் வழியில் தவிர்க்க முடியாத நிறுத்தம் காசி.  அதனால் தானோ என்னவோ, அடுத்த முறை காசி வரும்போது என்ற பேச்சும் தவிர்க்க முடியாததாகிறது.




Thursday, June 20, 2024

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 3

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

சில முக்கிய குறிப்புகள்


1. நம் வீடுகளில் இருக்கும் அளவிற்கு புண்ணிய க்ஷேத்திரங்களில் சுத்தமோ, ஆச்சாரமோ இருக்காது. அதனால் அந்த விஷயங்கள் உங்கள் ஈடுபாட்டை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. புண்ய க்ஷேத்திரங்களில் செய்யும் சடங்குகள் நாம் நம் ஊரில் செய்யும் சடங்குகளிலிருந்து சற்றே மாறுபடக்கூடும்.

3. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு கிடைப்பது கடினம். சில நாட்களில் மதியம் மூன்று மணிக்கும் மேல் ஆகலாம். பிரஷர், சுகர் உள்ளவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

4. காசி படித்துறைகளில் இறங்கி ஏற குறைந்த பட்ச ஆரோக்கியமும் ஓரளவு வலுவான முழங்கால்களும் தேவை.

5. சில படித்துறைகளில் உள்ள பாசமும், ஆழமும் நேரே கைலாயத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். கைலாயம் செல்லத் தயராக இல்லாதவர்கள் கவனமாக இருக்கவும்.

6. அதிக வயதானவர்களை அழைத்துச் செல்வதாக இருந்தால், அவர்களை முழு நேரம் கவனித்துக் கொள்பவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். வயதானவர்களைக் கவனித்துக் கொண்டே, சடங்குகளில் முழு மனதாக ஈடுபடுவது சாத்தியமில்லை.

7. சில இடங்களில் சக்கர நாற்காலி கிடைக்கும். காசியின் பல கோவில்களுக்குச் செல்ல அவற்றைப் பயன்படுத்த இயலாது.

திட்டமிடல்

காசி, பிரயாக்ராஜ், கயா சென்று வர மட்டும் குறைந்தபட்சம் ஐந்து நாட்களை ஒதுக்க வேண்டும்.  பயண கால தாமதம், பயண அசௌகரியம் போன்ற காரணங்களுக்கு இடம் அளித்து, சற்றே அதிகமாக ஒன்றிரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது.   முதலில் கூறியுள்ளபடி, காசியில் ஏற்பாடு செய்பவர்களைத் தொடர்பு கொள்வது திட்டமிடலை எளிதாக்கும்.  அவர்களே உறைவிடம், பயணம், உணவு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்ய உதவுவர்.


உறைவிடமும் பயண வசதிகளும்


விடுதிகளில் உச்ச வசதியை எதிர்பார்க்க முடியாது. TripAdvisor போன்ற தளங்களில் அவர்களைப் பற்றிய கருத்துக்களும் ஆதரவாக இருப்பதில்லை.  ஆனால், கிடைப்பது அது தான் என்ற நிலையில், குறைந்த எதிர்பார்ப்பும் புன்னகையும் ஏமாற்றங்களைக் குறைக்க உதவும்.


பிரயாக்ராஜ், கயா போன்ற இடங்களுக்குச் செல்ல கார், வேன் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  காசியில் உள்ள கோவில்களுக்கும் படி, படகுத்துறைகளுக்குச் செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும்.  காசி வண்டிக்காரர்கள் பெரிய அளவில் ஏமாற்றுவதில்லை.  வண்டிகள் பகிர்ந்து பயன்படுத்தப்படுவதால், கட்டணங்கள் ஒரு பயணிக்கு என்றே குறிப்பிடப்படுகின்றன.


உடை


சடங்குகள் செய்யும் ஒவ்வொரு நாளும் இரண்டு உடைகள் தேவைப்படும். அதற்காக பத்து ஜோடி உடைகளை எடுத்துச் செல்வது மிகையாகும்.  பெரும்பாலான விடுதிகளில் துணிகளை உலர்த்த இடம் இருக்கும். ஆனால் அவற்றில் வாஷிங் மெஷின்களை எதிர்பார்க்க முடியாது.   மனித சக்தியால் துவைத்து உலர்த்த வேண்டியிருக்கும்.  அதற்குத் தயாராக இருந்தால் சோப், சோப் பவுடர் எடுத்துச் செல்லலாம். கோடை காலத்தில் (மே, ஜூன் மாதங்களில்) துணி ஒன்றிரண்டு மணி நேரங்களில் உலர்ந்து விடும்.  பருவ மழைக்காலங்களில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்) துணிகள் காய்வதற்கு நேரம் எடுக்கும்.


உணவு


காசியில் பயண ஏற்பாடு செய்பவர்கள் உணவுக்கும் ஏற்பாடு செய்யக்கூடும். சடங்குகள் செய்யும் நாட்களில், சிரார்தத்திற்காக சமைக்க சமையல்காரர்களையும் ஏற்பாடு செய்து தருவர். காசி, கயா போன்ற இடங்களில் உள்ள வழக்கப்படி அங்கு கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைப்பது நம் ஊர் வழக்கப்படி இல்லாது இருக்கும். சிலர் தமிழ் நாட்டிலிருந்து வாழைக்காய், வாழை இலை போன்றவற்றை வரவழைப்பதும் உண்டு. பெரும்பாலான இடங்களில் காலை எட்டு மணிக்கு முன் டீ மட்டுமே கிடைக்கும்.


செலவு


காசியில் ஏற்பாடு செய்பவர்கள் வைதீக மற்றும் சிரார்த சமையலுக்கான தொகையை முன்னதாகவே குறிப்பிட்டு விடுவர்.  தங்குமிடத்திற்கான செலவு ஒரு நாளைக்கு ₹1800 முதல் ₹2500 வரை ஆகலாம். பிரயாக்ராஜ், கயா போன்ற இடங்களுக்குச் சென்று வரும் செலவு ₹20,000 வரை ஆகலாம்.  இவை 2024ஆம் ஆண்டு நிலவரம்.  இவை தவிர பிற உணவு, காசியில் உள்ளூர் பயணங்கள், படகு வாடகை, கோவில் பிரசாதங்கள், பிரயாக்ராஜில் மழித்தல் போன்ற தேவைகளுக்கு சுமார் ₹15,000 ஆகலாம்.  கடும் கோடை காலத்தில் தண்ணீருக்கு மட்டுமே ₹500 முதல் ₹1000 ஆகக்கூடும்.  குளிர் காலத்தில், ஸ்வெட்டர் போன்ற தேவைகள் ஏற்படலாம்.


தேவை

செலவு (2024 நிலவரப்படி)

வைதீகக் காரியங்கள், சிரார்த சமையல் செலவுகள்

சுமார் ₹60,000

தங்குமிடம்

நாளொன்றுக்கு இருவருக்கு ₹2500

நீண்ட தூரப் பயணங்கள்

₹20,000

உள்ளூர், படகுப் பயணங்கள் மற்றும் இதர செலவுகள்

₹15,000

இரயில், விமானப் பயணச் செலவு


உணவு, தண்ணீர்

நாளொன்றுக்கு இருவருக்கு ₹1,000 

அன்பளிப்பு, பிச்சை போன்றவை

₹5,000


உத்தேச பயண விவரம்

நாள்

விவரம்

1

இராமேஸ்வரம் செல்லுதல்

2

இராமேஸவரத்தில் செய்யும் சடங்குகள்

3

வீடு திரும்புதல், ஓய்வு.

4

காசி யாத்திரை தொடக்கம்

5

பிரயாக்ராஜ் சடங்குகள்

6

காசியில் நீராடி சிரார்தம், காசி கோவில்கள்

7

காசி படித்துறைகளில் பிண்டமிடுதல், கயா பயணம்

8

கயா சடங்குகள், காசி திரும்புதல்

9

தம்பதி பூஜை, காசி கோவில்கள்

10

ஓய்வு நாள் / காசி சுற்றிப்பார்த்தல்

11

காசியிலிருந்து ஊர் திரும்புதல்

12

ஓய்வு

13

இராமேஸ்வரம் பயணம், இராமநாதஸ்வாமி அபிஷேகம், ஊர் திரும்புதல்

14

ஓய்வு

15

சமாராதனை


இதே போன்ற விவரத்திற்கு - https://brahminrituals.blogspot.com/2015/06/tips-to-pilgrimage-to-prayag-varanasi.html


Wednesday, June 19, 2024

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 2


யாத்திரை

காசி செல்லும் முன், இராமேஸ்வரம் சென்று, கடலில் நீராடி பிந்து மாதவர், சேது மாதவர், வேணி மாதவர்களை மணலில் லிங்கங்களாகச் செய்து, அவற்றில் சேது மாதவரை சமுத்திரத்திற்கும், பிந்து மாதவரை அந்தணருக்கும் தானமாக அளிக்க வேண்டும்; வேணி மாதவரை, காசிக்கு எடுத்துச் செல்ல ஒரு (பித்தளை) சம்புடத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இராமநாதஸ்வாமி கோவிலில் உள்ள 22 கிணறுகளில் நீராடிவிட்டு முன்னோர்களுக்கு சிரார்தம் செய்த பின் இராமேஸ்வரத்திலிருந்து பிந்து மாதவரை இட்ட சம்புடத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பிந்துமாதவர் மீது உள்ள ஈரம் காயும் முன், காசிக்குச் செல்ல வேண்டும்.


1. காசி யாத்திரையின் முதல் கட்டம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) தொடங்குகிறது. பிரயாக்ராஜிலும் இவற்றிற்கு ஏற்பாடு செய்பவர்கள் இருக்கின்றன. காசியில் ஏற்பாடு செய்தவர்கள் மூலம் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் சிவ மடம் என்ற இடத்தில் சடங்குகளைச் செய்தோம். அங்கிருந்து திரிவேணி சங்கமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, பெண்கள் பூமுடி அளிப்பதும் (வேணி தானம்) ஆண்கள் தலையை மழித்துக் கொள்வதும் வழக்கம். இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த வேணி மாதவரை எடுத்துச் சென்று, திரிவேணி சங்கமத்திற்கு முன் உள்ள கங்கையில் கரைக்க வேண்டும். அங்கிருந்தே கங்கை நீரை எடுத்து வர வேண்டும். (காசியில் கங்கை நீரை எடுப்பது வழக்கமல்ல.) திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு, மடத்திற்குத் திரும்பி, முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்ய வேண்டும்.

காசியிலிருந்து பிரயாக்ராஜ் சென்று நீராடி விட்டு, சடங்குகள் செய்ய அரை நாளுக்கு மேல் ஆகும். பிரயாக்ராஜிலிருந்து அயோத்தி தாம் மூன்று மணி நேரப் பயணம் மட்டுமே என்பதால், அயோத்தி தாம் சென்று குழந்தை இராமனை தரிசித்து வருவது உசிதம். 

2. அடுத்த கட்டம் அதாவது அடுத்த நாள், காசியில் உள்ள அந்தணர்களின் அனுமதி பெற்று கங்கையில் நீராடி, பின்னர் சிரார்தம் செய்ய வேண்டும். 

3. அதற்கு அடுத்தபடி , காசியில் உள்ள முக்கியமான ஐந்து படித்துறைகளில் நீராடி, பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு படகில் செல்ல வேண்டும். பிண்டம் வைக்கத் தேவையான அன்னத்தை முன்பு படகில் சமைக்கும் வழக்கம் இருந்தது. இப்போது, அதற்கு அனுமதி இல்லாததால், சமைத்த அன்னத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

4. பின்னர் கயா செல்ல வேண்டும். கயா, புத்தருக்கு ஞானம் கிட்டிய பௌத்த கயாவிலிருந்து 15 கிமி தூரம். காசியிலிருந்து ஐந்து மணி நேர சாலைப் பயணம். இரவு கயாவில் தங்குவதால், அடுத்த நாள் சடங்குகளை இயன்றவரை முன்னதாக ஆரம்பிக்க முடியும்.

கயாவில் சிரார்த்தம் ஃபல்குனி நதியிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடத்திலும் பிண்டமிட வேண்டும். ஃபல்குனி நதியில் பிண்டம் இடுவதைத் தடை செய்துள்ளனர். அந்த நதியில் நீர் ஓடுவது வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே. விஷ்ணு பாதம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு பாறையின் மீது விஷ்ணுவின் பாதச்சுவடு உள்ளது. அதில் பிண்டமிடுவது வழக்கம். அங்கிருந்து சுமார் 2 கிமி தொலைவில் உள்ள அக்ஷய வடம் என்பது தாய் ஆலமரம். அதன் அடியிலும் பிண்டமிடுவர். 


விஷ்ணு பாத, அக்ஷய வட சிரார்தங்களில் காருணீகப் பித்ருக்களுடன், தன்னைச் சுமந்ததால் தாயாருக்கு நேர்ந்த சிரமங்களுக்காகவும், பல்வேறு காரணங்களால் பிண்டங்களைப் பெற இயலாது போன இறந்த ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பிண்டங்கள் இடவேண்டும். இவ்விரண்டு சிரார்தங்களிலும் குறைந்த பட்சம் 65 பிண்டங்களை இட வேண்டும். இவற்றில் அக்ஷய வட சிரார்தத்திற்கு மட்டும் அக்னிக்கு அன்னமளிப்பது உட்பட முழு சிரார்தம் செய்வது வழக்கம்.  இது வசதிக்காக மட்டுமே. மூன்று நாட்கள் தங்க முடிந்தால், ஒவ்வொரு நாளும் முழு சிரார்தம் செய்யலாம். அக்ஷய வடத்தில் பிண்டமிட்டபின், தமக்குப் பிடித்த இலை, காய், கனி மீதுள்ள பற்றை ஒரு பிராமணருக்கு தானமாக அளிக்கும் சடங்கு உண்டு.

5. காசிக்குத் திரும்பிய பின்னர், பிராமணர்களுக்கு பத்து வித தானம் செய்ய வேண்டும். சடங்குகள் நல்ல விதமாக முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விஸ்வேஸ்வரன் - அன்னபூரணியை ஒரு தம்பதியர் மீது ஆவாஹனம் செய்து, தம்பதி பூஜை செய்ய வேண்டும். அதன் பின், பிராமணர்களுக்கு உணவளித்து, யாத்திரையின் காசி படலத்தை முடிக்க வேண்டும்.

திரிவேணி சங்கமத்திலிருந்து எடுத்து வந்த கங்கை நீரை, அது குளிர்ச்சியை இழக்கும் முன், இராமேஸ்வரம் சென்று பூஜித்து இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். 

இராமேஸ்வரத்திலிருந்து வீடு திரும்பி, சமாராதனை செய்து பிராமணர்களுக்கு உணவளித்து காசி யாத்திரையில் எடுத்து வந்த கங்கை நீர், அன்னபூரணி விக்ரகம், காசி கயிறு போன்றவற்றை பிறருக்கு வினியோகிக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday, June 18, 2024

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 1


 

அறிமுகம்


இது கல்யாணத்தின் போது, குடை, கைத்தடி, கண் மை சகிதமாக மாமனார் பெண் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் போகும் யாத்திரை பற்றிய பதிவு அல்ல.  கால் நடையாகச் சென்று திரும்பி வருவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாது அந்தக் கால மனிதர்கள் போன காசியாத்திரை பற்றியதும் அல்ல.  ஓரளவு வசதிக்குப் பழகிவிட்டு, சம்பிரதாயங்களை முடிந்தவரை கடைபிடிக்கும் சாதாரணர்கள் இரயிலிலோ விமானத்திலோ போகும் காசியாத்திரை பற்றியது.  


அதிலுள்ள சடங்குகள் பற்றிய சிறிய அறிமுகம்.  இது திட்டவட்டமான சாஸ்திர வழிகாட்டி அல்ல.  மேலும் இந்தச் சடங்குகளை ஏன் செய்ய வேண்டும் அல்லது அவற்றைச் செய்வதால் என்ன பலன் போன்ற விவரங்கள் இந்தக் கட்டுரையில் இல்லை.


காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தபின், காசியிலும் பிற இடங்களிலும் சடங்குகளுக்கும் பிற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்ய காசியில் பலர் உள்ளனர்.  அனேகமாக சாஸ்திரிகள் பலருக்கும், நேரடியாகவோ அல்லது பிற தொடர்புகளும் மூலமோ காசியில் ஏற்பாடு செய்பவர்களைப் பற்றி தெரிந்திருக்கும்.  அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது நலம்.  அவர்களில் பலர், தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.  அதனால் கிருஹஸ்தர்களுக்குப் பதட்டம் ஏற்படுவது சகஜம்.  இந்தக் கட்டுரை அந்தப் பதட்டத்தைத் தணிக்க உதவும் என்று நம்புகிறேன்.

அடிப்படை சடங்குகள்


புண்ய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் போது முதலில் குளித்து விட்டு, காய்ந்த ஆடை அணிந்து கொண்டு சங்கல்பம் செய்துவிட்டு, அதன் பின்னரே புனித நீராடி முன்னோர்களுக்கு சிரார்தம் செய்வது வழக்கம்.  அங்கு சிரார்தத்தின் அங்கங்களான அக்னிக்கு அன்னமிடல், பிராமணர்களுக்கு உணவளித்தல், பிண்டமிடல், தர்ப்பணம் ஆகியவற்றை வசதிக்கு ஏற்றபடி செய்வர்.  அவற்றை (மஹாளயத்தின் போது செய்வது போல) காருணீகப் பித்ருக்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும். 


(தொடரும்)


Tuesday, June 04, 2024

எழுதப்பட்டவை எல்லாம் கராறான வரலாறு அல்ல

எழுதப்பட்ட வரலாறு ஒரு குத்துமதிப்பான உண்மை.  உதாரணத்திற்கு, 'நான் இன்று காலை பொங்கல் சாப்பிட்டேன்’ என்பது போன்ற எளிமையான தகவலாக வரலாற்றைப் புரிந்து கொள்வது சரியல்ல.  இதைச் சொல்லும்போது நான் சுய நினைவுடன் இருக்கிறேன், எனக்கு இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை போன்ற காரணங்களால் இன்று இந்தக் கூற்று பெருமளவுக்கு உண்மை.  ஆனால், ‘அவன் அன்று காலை பொங்கல் சாப்பிட்டான்’ என்ற ஒரு வரலாற்று கூற்றை எடுத்துக் கொண்டால், பின் வருவன எல்லாம் சாத்தியமானவை:

  1. அவனோ அல்லது அவன் வம்சத்தில் யாரோ பொங்கல் சாப்பிட்டார்.

  2. அவன் அன்று காலை ஏதோ சாப்பிட்டான்.

  3. அவன் என்றோ பொங்கல் சாப்பிட்டான்.


இவற்றில் பொதுவான விஷயம் ‘சாப்பிட்டது’ மட்டுமே.


‘பொங்கல் சாப்பிட்டான்’ என்பதற்கு அந்தக் கூற்று எழுதப்பட்ட காலத்தில் ‘உணவுப் பொருள் பொங்கலை ஒருவன் சாப்பிட்டான்’ என்பது மட்டுமே பொருள் என்ற ஊகமும் உள்ளது.  அந்தக் காலத்தில் ஒருவன் அடி வாங்கியதை இடக்கரடக்கலாக ‘பொங்கல் சாப்பிட்டான்’ என்று கூறும் வழக்கம் இருந்ததா என்று நமக்குத் தெரியாது.  இவற்றுடன் மொழி பெயர்ப்புகள், பொருள் கொள்ளல் போன்ற மாற்றங்களும் எழுதப்பட்ட வரலாற்றில் உள்ளதால், அவை கூட்டும் குழப்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.  அந்த மாற்றங்களில் மொழி பெயர்ப்பவர்கள், பொருள் கூறுபவர்கள் ஆகியோரது மொழி, கலாச்சாரச் சாய்வுகளும் எழுதப்பட்ட வரலாற்றில் சாயம் சேர்க்கின்றன.


பொதுவாக எழுதப்பட்டது மட்டுமே திட்டவட்டமான வரலாறு என்று எடுத்துக் கொண்டால், சமூக அரசியல் காரணங்களுக்காக  அதைத் திரிப்பது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. 


நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, மக்கள் தொகையில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.  அதிகாரிகளும், வர்த்தகத்தில் ஈடுபட்டோருக்கு மட்டுமே எழுத்துக்களால் பயன் இருந்ததால், பிறருக்கு எழுதப் படிக்க வேண்டியது இன்றியமையாத தேவை இல்லை.


எழுதப்பட்டவை என இங்கு குறிப்பிடப்படுவது கல்வெட்டுக்கள், தாமிரப் பட்டயங்கள், சுவடிகள் ஆகியன.  இவை வரலாற்று சான்றுகள் என்று எடுத்துக் கொண்டாலும், இவை யாவும் முழு வரலாற்றையும் விளக்குபவை அல்ல.


இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ள -  உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை - பொங்கு தமிழ் - கருத்துக்களம் (yarl.com).


கல்வெட்டு ஒரு நில விற்பனை பற்றியது.  அதில் நிலத்தின் முந்தைய உரிமையாளரைப் பற்றி குறிப்பிடுகையில் அந்த நிலம் எப்படி (ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபை எனக்குறிப்பிடப்பட்டுள்ள) கிராம சபையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது என ஒரு வரியில் விவரிக்கப்பட்டுள்ளது.  அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற இராஜ துரோகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்து பறித்து கிராம சபைக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.


இதிலுள்ள விவரங்களைக் கொண்டு, ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவனை ஏன், எப்போது, எப்படி கொன்றனர் என்பதோ, கொன்றவர்கள் எப்போது எவ்வாறு தண்டிக்கப்பட்டனர் என்பதோ ஊகிக்க முடியாதவை.  இவை ஒரு மர்மக்கதைக்கு கருவாகப் பயன்படலாம்.  கல்கியும் அப்படிப் பயன்படுத்தி பொன்னியின் செல்வனை எழுதிவிட்டார்.  ஆனால் எழுதப்பட்ட வரலாறான உடையார்குடி கல்வெட்டோ, கற்பனைக் கதையான கல்கியின் பொன்னியின் செல்வனோ முழுமையான உண்மையான வரலாறைக் கூறவில்லை.  இவற்றைப் படிக்கும் சரித்திர மாணவர்களும் சாதாரண மனிதர்களும் இவற்றின் நம்பகத்தன்மையை அப்படியே ஏற்கக் கூடாது.


கதைகளிலும் இலக்கியத்திலும் வரலாற்று நிகழ்வுகள் கருக்களாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.  அவற்றிலிருந்து வரலாற்றைக் கட்டமைக்கும் செயலுக்குப் பின், சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன.


சங்க இலக்கியங்கள் இலக்கியங்களாகவே பார்க்கப்பட வேண்டும்.  அவற்றின் காலத்தை பல்வேறு ஊகங்களால் நிர்ணயிப்பதும் அவற்றின் நாயகர்களை ஜாதித் தலைவர்களாக நிறுத்தும் இன்றைய போக்குக்குப் பின், நிச்சயமாக அரசியல் காரணங்களே உள்ளன. 


Is our pursuit of knowledge Dharmic?

 A few days ago, I began watching a Tamil movie - கெணத்தை காணோம் -  'The Well is missing' - The title is based on a popular comedy s...